Wednesday, December 29, 2010

அக்கரை பச்சை!

இது ஒரு சொந்த சோக கதை! சில (பல?) வருடங்களுக்கு முன் நான் இந்தியாவில் பொது துறையில் பணியில் இருந்த பொது, வருடாந்தர விடுப்புகள் (லீவ்) 

Casual Leave - 10
Earned Leave - 1 day for every 11 days in service
Sick Leave - 2 months (not really sure)
Annual Holidays - 15 - 20

இதில் கடுப்பேற்றுவது என்றால், type of leaves cannot be combined in one stretch, சனி ஞாயிறு முன்னும் பின்னும் லீவ் எடுத்தால் அவையும் லீவ் ஆக கணக்கில் சேர்வது என்பது போன்றவை. தொலை தூரத்தில் வேலையில் இருந்ததால் ஊருக்கு போக ஒவ்வொரு லீவையும் அடிக்கடி கணக்கில்   சரி பார்த்து கொண்டே இருப்பதால், மேலே சொன்னவை வயிறெரிய வைக்கும். 

ஆனால், கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில்  இருப்பதால், இந்தியாவில் கொடுத்த சலுகைகள் எவ்வளவு தாராளமானவை என்று தெரிகிறது. இங்கு வந்தவுடன் வருடாந்தர விடுப்புகளில் முதல் கொடுமை, எந்த கம்பெனி யாக இருந்தாலும் வருடத்திற்கு holidays 10 தான். நான் அறிந்தவரை இதில் பெரிய வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை. 
இரண்டாவது, Paid Time Off (PTO). இது நம் ஊரில் இருக்கும் casual leave + earned leave க்கு சமம். பெயரளவில். பொதுவாக இவை வருடத்திற்கு 10 முதல் 20 வரை கம்பெனிக்கு கம்பெனி வித்தியாசப்படுகிறது. ஆனாலும், இது அநியாயத்திற்கு குறைவு. நம் ஊரில் இருக்கும் சில குறைபாடுகள் (சனி ஞாயிறை லீவில் சேர்ப்பது போன்றவை) இங்கு களயபட்டாலும், பொதுவாக லீவ் மிக குறைவு என்பது நிச்சயம். 

வெளியூரில் இருக்கும்போதே நிறைய லீவ் தேவையான எனக்கு, வெளி நாட்டில் இப்போது இருப்பதால் இந்த குறை பூதாகாரமாக தெரிகிறதோ என்னவோ!

அதுவும் ஒவ்வொரு முறை இந்திய போகும்போதும் பார்த்த நண்பர்கள் / சொந்தங்களை விட பார்க்காமல் விட்டவர்கள் மிக அதிகமாக இருக்கும்போதும், பார்க்க முடியாமல் விட்ட சொந்தங்கள் அடுத்தமுறை இந்திய போவதற்குள் மண்ணிலிருந்து மறையும்போதும், கொஞ்சம் நிறைய நாள் லீவ் இருந்திருந்தால் இவர்களையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும்போதும்... 

லீவ் அதிகம் இல்லாதது பெரிய குறை தான் 

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, December 18, 2010

காங்கிரஸின் திட்டம்!


டிஸ்க்ளைமர் : இது முழுக்க என் கற்பனை மட்டுமே. நடக்க நிறைய சான்ஸ் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் இது வரை எப்போதும் இல்லாத அரசியல் சூழல் நிலவுகிறது. அசுர பலம் பொருந்தியதாக காட்சியளிக்கும் தி மு க உண்மையில் அதை எடுத்து நடத்த பலம் பொருந்திய அடுத்த தலைமுறை தலைவர்கள் இல்லாமல் இருக்கிறது. charismatic leader என்று எவரும் தென்பட வில்லை. கருணாநிதி அளவிற்கு அவர் வாரிசுகள் ஆளுமை உள்ளவர்களாக பரிமளிக்க வில்லை என்று நினைக்கிறேன். 
அ தி மு க விலோ எப்போதுமே அடுத்து யாருமே கிடையாது
அதனால், காங்கிரஸ் இப்போது சரியாக காய் நகர்த்துகிறது. கூடவே இருந்து தி மு க விற்கு மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கிறது. ஜெயலலிதாவும் எப்படியும் காங்கிரஸ் தன் பக்கம் வரும் என்று அவர்களை எதிர்க்காமல் இருக்கிறார். தி மு க வும் உறவை விட்டால் நெருக்கடி இன்னும் அதிகமாகுமோ என்று பயப்படுவது போல் உள்ளது. 
பல வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் இப்போது திமுக வை கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணும் வேலையே நடத்துகிறது. கலாநிதி / தயாநிதி மாறன்கள் பவர் இருக்கும் பக்கமே சாய்வார்கள். 

அதனால், இன்னும் இரண்டு மாதத்திற்குள் தி மு கவை ஒரு வழி பண்ணி விட்டு தனியாக தேர்தலை சந்திப்பார்கள். எல்லோருக்கும் தெரிந்த முகமாக ப சிதம்பரம் இருப்பதால் அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டி இடுவார் என்று நினைக்கிறேன்..

இது என் எண்ணங்கள் மட்டுமே. தவறிருந்தால் பொறுத்தருள்க!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

அரசியல் வாதி - சரத் பவார் !


சரத் பவார் கார்பொரேட் முதலாளிகளுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா?
நீரா ராதியா டேப் வெளியானதால் கவலைப்படும் கார்பொரேட் முதலாளிகளுக்கு சொல்வது என்ன என்றால், அவர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக மன்மோகன் சிங் பேசுவார் என்பது தான். 

அதாவது, பயப்படாதீர்கள், உங்கள் பேச்சு இனிமேல் டேப் செய்ய படாது. உங்களுக்கு ஆதரவாக இருக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்பதும் கூட!

இவர்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? இந்த சரத் பவார் இவ்வளவு பெரிய ஊழல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதனால் முதலாளிகளுக்கு வரும் நெருக்கடி பற்றி கவலை படுகிறார். இந்த முதலாளிகள் சேர்ந்து அமைச்சர்களை நிர்ணயிக்கும் அசிங்கத்தை பற்றி பேச துப்பு இல்லை! 

அதே போல், இந்த ஊழல் பற்றி தார்மீக பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதம மந்திரி முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுவாராம்.  

இவர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளது!

தொடர்புடைய செய்தி : 
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, December 7, 2010

CBI ரைட்!

முன்னாள் மந்திரி ராஜா மற்றும் அவருடன் 2G வழக்கில் சம்மந்தமானவர்கள் என்று சந்தேக படும் நபர்கள் வீடுகளில் CBI ரைட்!
இந்திய நேரம் காலை 7 மணி முதல்.. 
நீதி உண்மையிலேயே கிடைக்கும் போல் இருக்கிறது. நல்லது நடந்தால் சரி!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, October 24, 2010

பகடி

தமிழில் மிக நல்ல பகடி படம் தமிழ் படம். இதை எடுத்த தயாநிதி அழகிரி இப்போது எடுக்கும் வ குவாட்டர் கட்டிங் படத்தில் அந்த பகடியையும் மிஞ்சிவிட்டார். 
இந்த போஸ்டரை பாருங்கள்.

இதில் பெயர் தவிர எதுவும் தமிழில் இல்லை! தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்ற அரசு உத்தரவை தலைப்பை மட்டும் தமிழில் போட்டு பகடி செய்ய நிறைய நகைச்சுவை உணர்வு வேண்டும். இவர்களுக்கு நிறைய இருக்கிறது. அரசு உத்தரவுப்படி தமிழில் தலைப்பு இருப்பதால் கண்டிப்பாக வரி விலக்கும் உண்டு. வாழ்த்துக்கள். 

Disc. Image courtesy: Google images / Tamilchannel
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, August 18, 2010

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் (1)

இது என் சமீபத்து இந்திய பயணத்தின் இரண்டு அனுபவங்கள் 


இரண்டும் பதிவாளர் அலுவலகத்தில். 
முதலாவது சென்னை அருகில் உள்ள புகழ் பெற்ற திருத்தலம் ஒன்றில். கோவிலில் நடை பெற்ற திருமணத்தை பதிவு செய்ய வேண்டியிருந்தது. மணமகன் வெளி நாட்டில் வசிப்பதால் குறைந்த கால அவகாசமே இருந்தது.
பதிவு சான்றிதழ் வாங்க யாரும் பொறுப்பான பதில் தர வில்லை. பக்கத்தில் இருந்த டீ கடைக்காரர் அறிவுரைப்படி தரகரை அணுகினோம் (தவறு தான். வேலை ஆகவேண்டுமே) . எல்லா சான்றிதழ்களும் இருந்தும் Rs. 3000 கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் மூன்றாம் நாள் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதில் எங்களின் ஒரே special need சான்றிதழ் உடனே கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்க்கு Rs. 3000 அதிகம் தான்!


இரண்டாவது power of attorney கொடுக்க வேண்டியிருந்தது. இது சென்னையில் ஒரு பதிவாளர் அலுவலகத்தில்.  மாடியில் அலுவலகம். கீழே இருக்கும் அனைத்து கடைகளும் தரகர் வேலை பார்ப்பவர்கள். முகம் பார்த்து Rs 1100 என்றார்கள். இதில் எந்த விதத்திலும் குறைப்பதே இல்லை.  அங்கே ஒரு பெண் அலுவலர் டெஸ்க் டிராயரில் பணத்தை திணிப்பது பார்த்து அசந்து போனேன்! யார் சொன்னது பெண் முன்னேற்றம் இல்லை என்று?


ஒரு சாதாரண சான்றிதழ் வாங்கக்கூட லஞ்சம் கொடுத்தே ஆகா வேண்டுமா?
இதற்க்கெல்லாம் லஞ்சமில்லாமல் சான்றிதழ்கள் பெற வழியே இல்லையா?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, August 17, 2010

உமாஷங்கருக்கு ஆதரவாக..

இந்தியா இன்று எதிர்நோக்கியிருக்கும் பெரிய பிரச்சனை லஞ்சம். அதற்க்கு எதிராக போராடும் உமா ஷங்கர் பழிவாங்கப்படுவது பெரிய கொடுமை. காலம் எவரையும் உயர்த்தும்.. எவரையும் தாழ்த்தும். அவர் மேலே உயரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. 



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, July 10, 2010

வணக்கம்

இது என் முதல் பதிவு. 

எளியவை என்று எனக்கு தோன்றுபவற்றை பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறிய முயற்சி. 

தவறுகளை சுட்டிக்காட்டினால் தன்யனாவேன்!

--ஒரு எளியவன் 
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...