Thursday, March 14, 2013

குற்றங்களை குறைக்க எளிய வழி !



கடந்த சில மாதங்களாகவே மீடியாவில் வரும் செய்திகளில் முக்கியமானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள். கிட்ட தட்ட எல்லா விதங்களிலும் செயலற்றதாக இருக்கும் இந்திய அரசு, இதில் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம், வேகமாக செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. அதற்கு அரசுக்கு பாராட்டுக்கள். 

அதே நேரம், அதில் உள்ள சில பிரிவுகள் இந்த சட்டத்தை மட்டும் அல்லாது, ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் நீர்த்துப்போகுமாறு செயல் படக்கூடியது. 

அதில் முதலாவது, இருவரும் ஒத்துக்கொண்டு வைத்துக்கொள்ளும் செக்ஸ் ரேப் ஆகாது. மேலோட்டமாக இது சரியாக தோன்றுகிறது. ஆனால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு, அந்த இருவரின் வயதும் பதினாறு இருந்தாலே போதும் என்கிறது! பதினாறு வயதில் என்ன தெளிவு இருக்க முடியும்?

இதற்க்கு விளக்கமளித்த அமைச்சர் கூறியது, கிட்ட தட்ட, இருவரும் மனம் ஒத்து வைத்துக்கொள்ளும் செக்ஸ் தவறே இல்லை, இருவருமே மைனராக இருந்தாலும் கூட என்ற வகையில் இருக்கிறது! இது பற்றிய செய்தி

கண்டிப்பாக குற்றங்களை குறைக்க இது ஒரு வழி. செய்தது குற்றமே இல்லை என்றானபின் குற்றங்கள்  குறையுமா இல்லையா?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...