Wednesday, December 12, 2012

மேதைக்கு அஞ்சலி!



சிதார் மேதை ரவி ஷங்கர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தியது. அவர் தன் வாழ்நாளை இசைக்காகவே அற்பணித்திருப்பது அவர் வாழ்க்கை குறிப்பை படித்ததில் தெரிந்தது.  சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் எப்போது படித்தாலும் பிரமிப்பை தருகிறது 
  • உலகப்புகழ் பெற்ற உதய் ஷங்கர் இவர் அண்ணா 
  • இவர் பள்ளியில் படித்தது மொத்தம் நான்கு வருடங்களே 
  • உலகப்புகழ் பெற்ற சரோத் மேதை அலி அக்பர் கான் இவர் மனைவியின் சகோதரர் 
  • சாரே ஜகான்சே அச்சா பாடல் இவர் அமைத்த மேட்டிலே தான் இன்னும் பாடப்படுகிறது 
  • காந்தி படத்திற்கு இசை அமைப்பாளர் இவரே. அதற்க்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார் 
  • இசைக்கு வழங்கப்படும் கிராமி அவார்டை இவர் மூன்று முறை பெற்றிருக்கிறார் 
  • நம் நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா பெற்றதோடு, பிரான்ஸின்  உயர்ந்த விருதையும் பிரிட்டனின் சர் பட்டமும் பெற்றவர் இவர் 
  • மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் 
  • முப்பத்தொன்று புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 
  • கர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில்  பயன் படுத்தியிருக்கிறார் 
  • இவர் மகள்கள் இருவரும் பலமுறை கிராமி வென்றிருக்கிறார்கள் 
  • உலகப்புகழ் பெற்ற இசை மேதை யெஹுதி மேனுஹினுடன் சேர்ந்து வாசித்த ஈஸ்ட் மீட்ஸ் வேஸ்ட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று 
நான் நெகிழ்ந்த மற்றொரு விஷயம்.. இவர் கடைசி கச்சேரி இந்த வருடம்  நவம்பர் நான்காம் தேதி நடந்தது. மறக்காதீர்கள். அவருக்கு வயது 92! மேடைக்கு வர சக்கர நாற்காலி தேவையாக இருந்தது அவருக்கு. அது மட்டும் இல்லை. கையோடு எடுத்து செல்லும் வகையில் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்க முடிந்தது. இருந்தும் அரங்கத்தில் இருந்த அனைவரும் பிரமிக்கும் வகையில், அவர் இசைக்கு வயதே தெரியவில்லை என்றும் பலரும் புகழும் வகையில் அவர் இசை அன்று இருந்தது.

இவர் புவியில் இருந்தபோது நானும் வாழ்ந்தேன் என்பது  எனக்கு பெருமை!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, November 12, 2012

ஒபாமாவின் தீபாவளி வாழ்த்து!



ஒபாமாவின் தீபாவளி வாழ்த்தை பார்த்தேன். வெறும், கொஞ்சம் ஸ்ரத்தையோடு தீபாவளியை பற்றி கொஞ்சம் சொல்லி வாழ்த்தும் சொல்லியிருக்கிறார்.



எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, October 3, 2012

இன்னும்.. இன்னும்.. கீழே..




இதற்கு முன் இன்னும் எவ்வளவு கீழ் தரமாக இறங்கப்போகிறோம் என்று எழுதியிருந்தேன். இன்றைய செய்தியை படித்தால், அதைவிட கீழ்த்தரமாக போக அதிக நாட்கள் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

ராஜாவை பார்லிமென்ட் எனர்ஜி கமிட்டிக்கு மெம்பராகவும் கல்மாடியை பார்லிமென்ட் வெளியுறவு கமிட்டிக்கு மெம்பராகவும் அரசு நியமித்திருக்கிறது. இதில் கல்மாடியை வெளியுறவு கமிட்டிக்கு உறுப்பினறாக்கியதர்க்கு காங்கிரஸின் நகைச்சுவை உணர்வு தான் காரணம் என நினைக்கிறேன். அவர் தானே இந்தியாவின் மானத்தை உலக அளவுக்கு வாங்கியவர்!

குற்றவாளியோ இல்லையோ. அந்த சந்தேகத்தினால் தானே சிறையில் இருந்தார்கள்? மந்திரி பதவியும் போனது? இன்று வரை அந்த வழக்குகள் முடியவில்லை. ஆனால் மறுபடியும் இவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவியை மத்திய அரசு கொடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இன்னும் மூன்று வருடம் தேர்தல் இல்லை. எவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற திமிர் தானே?

இந்த அளவு மக்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் அரசை இந்தியா பார்த்ததில்லை. அதே போல, மன்மோகன் போன்ற பசு தோல் போர்த்திய புலியை , நரியை, இதுவரை இந்தியா பார்த்ததில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, September 22, 2012

நமக்கெல்லாம் சுரணையே இல்லையா?



நான் முன்னொரு காலத்தில் யூனியன் ஆதிக்கமில்லாத ஒரு அரசு நிறுவனத்தில் பணி புரிந்தபோது கேட்டது. ஒருவர் அந்த நிறுவனத்தின் எச் ஆர் தலைவரை, யூனியன் ஆதிக்கமில்லாததை எப்படி சாதித்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர், இளைஞ்சர்கள் வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர்கள் தலையை தூக்க முடியாத அளவு வேலை கொடுத்து பிசியாக வைத்திருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாம் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்றாராம்.

இன்று இந்தியாவில் நடப்பதை பார்த்தால் அந்த எச் ஆர் தலைவரின் சூழ்ச்சி போல ஒன்று தான் இந்தியாவின் தற்போதய நிலைமைக்கு காரணம் என்று தோன்றுகிறது!

யோசித்துப்பார்த்தால், கார், பர்னிச்சர் செட் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர என் அப்பாவின் இப்போதைய என் வயது வாழ்க்கைக்கும் இப்போது என் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை! இருந்தும், அவருக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது போலவும் இப்போது எனக்கு இல்லாமல் இருப்பது போலவும் இருக்கிறது. இது எனக்கு மட்டும் பொருந்தவில்லை. என் நண்பர்கள் பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தினப்படி வாழ்க்கையே ஓட்டமாக இருக்கும்போது எப்படி போராடுவது?

நமக்கு எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரமாகவாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எரிச்சலூட்டும் அரசியல் வாதிகள். மன்மோகனின் பேச்சை கேட்டீர்களா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், மானம் எதுவுமே இருக்காதா? நேர்மையான நிர்வாகமே வளர்ச்சி தரும் என்று கொஞ்சமும் கூசாமல் எப்படி இவரால் சொல்ல முடிகிறது? திருப்பி திருப்பி சொல்லவே அலுப்பு தட்டும் அளவுக்கு ஊழல்கள்! 

இவர் ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மறுபடி மறுபடி ஊழல் செய்து, ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று மக்களை நினைக்க வைப்பது தான்!  அதைவிட பெரிய விஷயம், இது வரை எந்த அரசியல் வாதியும் மாட்டவில்லை! குற்றம் நிரூபணம் ஆகும் வரை குற்றவாளி இல்லை. அவ்வளவு சீக்கிரம் குற்றம் நிரூபணம் ஆக விடமாட்டோம் என்று நடந்து கொள்ளும் அரசு! சி பி ஐ என்பது வாசலில் கட்டி வைத்திருக்கும் நாய் தான். யாரை காட்டுகிறோமோ அவரை பார்த்து குறைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறது அரசு!

இந்த அளவு ஊழல் புகார் வந்தபின்னும், இப்படி மன்மோகனால் சொல்ல முடிகிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள். இவர்கள் தின பிழைப்பே போராட்டமாக இருக்கும்போது இவர்களா எதிர்த்து ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை தானே?

நமக்கெல்லாம் உண்மையிலேயே சுரணை இல்லையா?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, September 8, 2012

உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?



உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை. 

இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!

யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!

இன்றைய தினமலரில்..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, July 1, 2012

இன்னும் எந்த அளவு கீழ் நோக்கி செல்லப்போகிறோம்?



ஒரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சங்மா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அவர்களிடம் ஆதரவு பெற அவர் வீட்டிற்கு செல்கிறார். மறு பக்கம் அடுத்த ஜனாதிபதி ஆக பெரிய வாய்ப்பு உள்ள பிரணாப் 2G குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள கனிமொழி வீட்டிலிருந்து ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!  (இதில் சட்டப்படி ஒரு தாரத்திற்கு மேல் மணமுடிப்பது குற்றம் என்றிருக்கும்போது கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து  பிரச்சாரத்தை தொடங்குவது இன்னுமொரு கொடுமை!  எதிலும் தன் குடும்பத்திற்கு லாபத்தை எதிர்நோக்கி காய் நகர்த்தும் கருணாநிதி இப்போதெல்லாம் டெல்லியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கனிமொழி வீட்டில்தான் சந்திக்கிறார். முதலில் அந்தோனி.. இப்போது இவர்!)

ஜனாதிபதி பதவி என்பது வெறும் பதவி மட்டும் இல்லாமல் முதல் குடிமகன் என்ற மதிப்பையும் கொடுக்கிறது. அதுவும் இல்லாமல், அவர்கள் மேல் குற்றவழக்கு எதையும் தொடரவும் முடியாமல் ஒரு பாதுகாப்பும் கொடுக்கிறது (என அறிகிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்). யாரையும் மரண தண்டனையிலிருந்து கூட மன்னிக்க உரிமை உள்ள பதவி!

இப்படி இருக்கும்போது இந்த பதவிக்கு வருபவர்மேல் யாருடைய நிழலும் விழாமல் இருப்பது முக்கியம் இல்லையா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களின் நிழல் இவர்கள் மீது விழுந்தால் எந்த வழக்கிலும் அவர்கள் சார்பாக இருக்க நேரிடும் அல்லவா. 

நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, June 26, 2012

இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!



இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய
 வேண்டியவை

  • நல்ல உள் கட்டமைப்பு
  • எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
  • எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
  • விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள் 
  • பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு 
  • எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..

இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.

இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.

ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, June 15, 2012

ஏழை மக்கள் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருள் அதிரடி விலை குறைப்பு!




ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார். 

அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை 
இந்த அரசு குறைத்திருக்கிறது.  ஏப்ரல்   மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு! 

இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா? 

எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!  

வயறு எரிகிறது!  'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, June 6, 2012

அமெரிக்காவில் பெட்ரோல் விலை..







பல்லாயிரக்கணக்கான கோடி 'நஷ்டத்தில்' இருக்கும் பொது துறை பெட்ரோலிய நிறுவனங்களின் 'நஷ்டத்தையும்' பொருட்படுத்தாமல் மக்களை காக்க ஒரு லிட்டருக்கு வெறும் ரூ.  5.50 மட்டுமே கருணையுடன் விலை உயர்த்திய மன்மோகன் (சோனியா) தலைமையிலான அரசின் பார்வைக்கு :

தாங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் அமெரிக்காவில் பெட்ரோல் அரசு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தனியார் மாத்திரமே செய்கிறார்கள். அரசு பெட்ரோல் விலையில் தலையிடுவதில்லை. எந்த வித 'மான்யங்களும்' கொடுப்பதில்லை. இருந்த போதும், இன்றைய விலை கிட்ட தட்ட லிட்டருக்கு  ரூ. 52 மட்டுமே! ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் தனிநபர் வருமானமாக இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75 -க்கும் அதிகம்! இது எந்த விதத்தில் சரி?

இந்த முறை விலை ஏற்றியதற்கு நீங்கள் சொன்ன காரணம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. உண்மை தான். ருபாய் மதிப்பு கிட்டதட்ட 20% குறைந்திருக்கிறது  இந்த மூன்று மாதங்களில்! ஆனால், அதே சமயம், சுத்திகரிக்காத பெட்ரோலின் மதிப்பு பாரல் ஒன்றிற்கு  $ 110 -இலிருந்து $ 85 -இற்கு சரிந்திருக்கிறதே.  அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லையே! அதுவும், கொள்முதல் விலை குறைந்தது கிட்ட தட்ட அதே 20% !
இருந்தும் விலையை  ஏற்றாமல் சமாளிக்க முடியவில்லை   என்றால் நீங்கள்   பெரும் பொய்யர் என்று தெரிகிறது!

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 29, 2012

நம் கண்ணுக்கு சுண்ணாம்பு.. பக்கத்து வீட்டுக்காரன் கண்ணுக்கு வெண்ணை!

 இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள்...

நம்ம ஊரில எவன் செத்தா நமக்கென்ன.. இன்னைக்கு எந்த மாதிரி பல்டி அடிச்சா அமெரிக்கா காரன் நம்பள பாத்து சிரிப்பான்..
எவன் கொவிச்சுக்குவானோ! எதுக்கு வம்பு.. எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்போம். எப்போவாவது உதவும்.. 
நமக்கெல்லாம் எதுக்கு முதுகெலும்பு. அதெல்லாம் பணம் இருக்கும் பெரிய நாட்டுக்காரனுங்களுக்கு. 
அடுத்த வாரம் தானே முடிவெடுக்கணும்.. அன்னிக்கு பாத்துக்கலாம். இப்பவே எதுக்கு முடிவெடுக்கணம்..

இந்த கொள்கைகளில் முதல் கொள்கைப்படி, தமிழகத்திற்கு இப்போது மின்சாரம் கொடுக்க முடியாது என்று சொல்லி அதே வேலையில் பாகிஸ்தானுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்களே, இவர்களை எதால் அடிக்க?



நம் நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே நல்லது செய்யும் மன்மோகன் சிங் அவர்களை பேசாமல் உலக நாடுகளின் தலைவராக ஆக்கிவிட்டால் என்ன? இந்தியாவாவது பிழைக்கும்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, March 28, 2012

கண்கள் உங்களை ஏமாற்றும்..

Naina Thag Lenge - ஹிந்தி - Movie : Omkara

இதோ இன்னொரு பாடல். இதுவும் ஹான்டிங் பாடல் தான். பாடியவர் ரஹாத் படே அலி கான். நஸ்ரத் படே அலி கானின் தம்பி. படம் ஓம்காரா. ஒதெல்லோ வின் இந்தியப்படுத்திய படம். ஸைப் அலி கானின் அருமையான நடிப்பு.

இந்த பாடல் காட்சியில், ஒருவனை நம்பி ஊரை விட்டு ஓடி வரும் பெண்ணை எவனுடன் ஓடி வந்தாளோ அவனே சந்தேகப்படும் காதல். சந்தேக விதை விழுந்த கணத்திலேயே மனதளவில் அவள் செத்து விடுவாள். கரீனாவின் அற்புத நடிப்பை பார்க்கும்போது தான் தெரியும், பெரிய அழகில்லாத அவரை எல்லோரும் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்று!

கண்கள் உங்களை ஏமாற்றும். அது நல்லவன் என்று சொல்பவனை நம்பி சென்றால் வருவதெல்லாம் கண்ணீர்தான்.. என்று பாடல் போகும்..


Enjoy the music..



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, March 25, 2012

மனதை சுற்றி சுற்றி வரும் மற்றொரு பாடல்..

Maina Lagiyan Baarishaan- ஹிந்தி - From movie Anjana Anjani.

முன்னர் அறிமுகம் செய்த பாடலை கேட்கவில்லை என்றால் கொஞ்சம் கேட்டு விட்டு வந்து விடுங்கள்.. 

இதோ மனதை சுற்றி சுற்றி வரும் மற்றொரு பாடல். முதல் நாலு வரிகளுக்குள் பாட்டில் நம்மை ஈர்த்து விட்டு வேறு தளத்துக்கு பயணிக்கிறது இசை.. இருந்தாலும், அந்த முதல் நாலு வரிகள் மனதை விட்டு அகலுவதில்லை.

பாடலுடன் வரும் காட்சிகளும் பிரமாதமான விஷுவல்ஸ் உடன் இருப்பது இதமாக இருக்கிறது. நம் ரவிச்சந்திரன் கேமரா.

இதில் இன்னொரு விசேஷம் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பது.. பேஷன் பார்த்தீர்களா. அதில் அதகளம் பண்ணியிருப்பார். 

கேட்டு (பார்த்து) மகிழுங்கள்..




மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 23, 2012

மனதை சுற்றி சுற்றி வரும் பாடல்..


Tose Naina Lage..  ஹிந்தி பாடல்..

ரொம்ப நாள் கேக்காம விட்டு மறுபடியும் அகஸ்மாத்தா கேட்டுவிட்டு மூளையில் எறும்பு மாதிரி சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கும் பாடல் இது. ஏன் தான் மறுபடி கேட்டோமோ என்று செல்லமாக கடிந்து கொள்ளவும் தோன்றியது..

ஹான்டிங் மெலடி பாடல் இது.. ஒரு முறை கேட்டால் மறுமுறை தவறாமல் கேட்பீர்கள்.. இசை மிதுன் ஷர்மா..  இவரின் வேறு எந்த பாடலும் அதிகம் கேட்டதில்லை.. தேடி பார்த்து கேட்கவேண்டும்..

Enjoy..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, February 22, 2012

ஐன்ஸ்டீன் எழுதிய சினிமா ஒன் லைன்!





எதேச்சையாக ஐன்ஸ்டீன் எழுதிய ஒரு வாக்கியத்தை பார்த்தேன்.. இது தோனி படத்தின் ஒன் லைன் தானே!



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, January 17, 2012

செய்தி விமர்சனம்!



தினமணியில்..




உத்தரகண்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வுகாண ஒரே வழி ஆட்சி மாற்றம்தான் என்றும் வலியுறுத்தினார் சோனியா ..


பின்னே.. கொள்ளை அடிக்கறது காங்கிரஸின் பிறப்புரிமை.. அதை மற்றவர் காப்பி அடித்தால் சும்மா விடுவாரா..




தினமணியில்..
ராகுல் விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பிரியங்கா


அவர் எல்லா இடத்திலும் ஆப்பை தேடி அதில் அமர்ந்து கொள்வதால்.. இதிலும் அப்படியே செய்வார் என்று நம்புகிறேன்.. பிரியங்கா 


தினமணியில்..


ஓய்வுபெறுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: கம்பீர்


உண்மை தான்.. ஒய்வு பெற்றே ஆக வேண்டிய மன்மோகன் போன்றவர்கள் பதவியை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தால் எல்லோருக்கும் இப்படி தான் தோன்றும்!


தினமணியில்..
கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் விமானத்தை தரை இறங்கிய விமானிகள்

ஏதோ இந்த அளவு நம் நாட்டிற்கு உள்ளேயே தரை இறங்கினார்களே.. அந்த அளவு உத்தமம்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...