Thursday, March 24, 2011

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?




தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கிறது. இதே தேர்தல் கமிஷன், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்களை எதிர்த்து ஒன்றும் சொல்வதில்லை.


இந்த தேர்தலில் தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 35 கிலோ அரிசி - ஏழை மக்களுக்கு
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • இன்ஜினியரிங் மாணவர்கள் எல்லோருக்கும் லேப்டாப்
  • மீனவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி அல்லது கிரைண்டர் 
...மற்றும் பல.. 


அ தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 20 கிலோ அரிசி - எல்லா குடும்பங்களுக்கும்
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • 12 -ஆம் வகுப்பு மானவர்களிலுருந்து அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி
  • குறைந்த விலையில் கேபிள் 
  • ஏழை மக்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்....
..மற்றும் பல..

இதில் இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்டது, அனைத்தும் அரசு பணத்தில் என்பதை. 

ஆனால், தேர்தலுக்கு முன் கொடுக்கும் பணம் அரசு பணம் இல்லை. அவரவர்கள் சம்பாதித்த  பணம். 

இப்படி இருக்கும்போது  தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடை செய்வது சரியா? தடை செய்வது அரசியல் வாதிகளுக்கு நன்மையாகவே முடிகிறது!

நீங்களே சொல்லுங்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 17, 2011

புள்ளி(யில்லாத) ராஜா!



விகிலீக்ஸ் இந்தியா குறித்து  வெளியிட்டுள்ள  ரகசியங்களில் பெரிய அளவு பரபரப்பை உருவாக்கி இருப்பது, பார்லிமென்ட்-இல் ஒரு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட லஞ்சம் கொடுத்த விவகாரம். மன்மோகன் பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் (உண்மை தானே) என்று பி ஜே பி , கம்யூனிஸ்ட் என்று எல்லோரும் உரக்க குரல் கொடுக்கிறார்கள். 

மன்மோகன் வழக்கம் போல், 'எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா' என்று பேசாமல் இருக்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி, இதற்கு பதிலளிக்கையில்  எதிர்கட்சிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். Manmohan Singh is a "spotless Prime Minister" என்று கூறியுள்ளார். "spotless prime minister" என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இது இல்லை என்றாலும், மன்மோகன் சிங்கிற்கு பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு..

மன்மோகன் சிங் ஒரு "புள்ளியில்லாத ராஜா"!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தி மு க வுடன் அ தி மு க கூட்டணி?




ஸ்பெக்ட்ரம் ஊழல், திரையுலகில் எப்போதுமில்லாத அளவு ஆக்கரமிப்பு, நாளும் உயரும் விலைவாசி, ஈழப்படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமில்லாது அவற்றை நடத்த துணை போனது, நாளும் நடக்கும் மீனவ படுகொலை என்று எவ்வளவோ விஷயங்கள் தி மு க விற்கு எதிரே.

அவற்றின் துணையால் வெற்றி கோப்பை தட்டில் வரும்போது, அது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது (பெட்டி) ஏற்கனவே கிடைத்துவிட்டது என்பது போல் இருக்கிறது ஜெ வின் நடவடிக்கைகள். 

கூடவே இருந்த வை கோ விற்கு கை விரிப்பு, முதலில் கூட்டணி அமைக்க வந்த கார்த்திக்கிற்கு அல்வா, கடைசியில் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்த தான் தோன்றி தனம்.. 

எல்லாவற்றிற்கும் இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று, தன் வெற்றி உறுதி என்ற ஓவர் கான்பிடன்ஸ். இல்லையேல், தி மு க வுடன் ரகசிய கூட்டணி. 

இரண்டுமே யாருக்கும் (தி மு க தவிர) நல்லதில்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு, காங்கிரஸ்ஸிற்கு முடிவு?



காங்கிரஸ் - தி மு க இடையே கூட்டணி முறிந்துள்ளது. அவசர அவசரமாக இணையலாம். அப்படி இல்லாமல் போனால் காங்கிரஸ்ஸிற்கு இதனால் என்ன பாதிப்பு என்று கொஞ்சம் அலசலாம். 

எல்லோருக்கு தெரிந்த ஒரு விஷயம், தனியாக நின்றால் மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரஸ் வெல்ல முடியும். சொல்லப்போனால் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம். இது காங்கிரஸ்ஸிர்க்கும் தெரிந்ததே. அதற்க்கு பின்னாலும் இப்படி அவர்கள் முறுக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம்?

ஒன்று, காங்கிரஸ்ஸின் மிகப்பெரிய பிரச்சனை கோஷ்டி சண்டைகள். இதற்க்கு காரணம், தொண்டர்களை விட தலைவர்கள் நிறைய! ஒரு சின்ன பட்டியல்,
தங்கபாலு
வாசன்
சிதம்பரம்
இளங்கோவன்
ஜெயந்தி நடராஜன்
....
இவர்களுக்கு அடுத்த லெவலில்
யசோதா
ஞானசேகரன் 
வசந்த் & கோ - வசந்த் 
...
இன்னும் சட்டென்று பட்டியலிட முடியாத மேலும் 20-30 பெயர்கள். இந்த தலைவர்களின் உண்மையான செல்வாக்கு என்ன என்று தேர்தலில் தனியாக நின்றால் கச்சிதமாக கணிக்க முடியும்,.  தேர்தலில் தோற்ற பிறகு, செல்வக்கில்லாதவர்களை எளிதில் களையெடுக்க முடியும். 

எல்லோரும் சொல்வது போல் பீகாரில் காங்கிரஸ் ஸி ற்கு பிரம்மாண்ட தோல்வி என்று சொல்ல முடியாது. என்ன முன்னர் 4 M L A இருந்தார்கள். இப்போது 2 தான். ஆனால், அங்கு இருக்கு வேற்று வெட்டு தலைவர்களை அடையாளம் காண தேர்தல் வழி வகுத்து விட்டது. அதை தான் இந்த தேர்தல் இங்கு செய்யும். 

இரண்டு, கருணாநிதிக்கு பிறகு தி மு க பல பிரிவாக பிரிந்து விடும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் ஒன்றும் இல்லை. அதனால், கருணாநிதிக்கு பிறகு வரும் வெற்றிடத்தை நல்ல முறையில் காங்கிரஸ் உபயோகப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் தனியாக நின்றால், காங்கிரஸ் திராவிட கட்சிகளுக்கு நல்ல ஒரு மாற்றாக காட்சி அளிக்கும். இன்றைய  தேதியில் அப்படி யாரும் இல்லை என்பதே உண்மை!

மூன்றாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி மு க மட்டுமே காரணம் என்று எளிதில் கை கழுவி விடலாம். ஓர் அளவிற்கு மேல் தி மு க வும் எதுவும் செய்ய முடியாது. சோனியா இந்த ஊழலில் பங்கு பெற்றிருந்தால் கருணாநிதியும் பங்கு பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினால் இருவருமே மாட்டிக்கொள்வார்கள். அதனால், மேலும் மேலும் குட்டையை குழப்புவார்களே ஒழிய வெளிப்படையாக ஒன்றும் நடக்காது!

எல்லாவற்றையும் பார்த்தால், நீண்ட நாள் திட்டப்படி தனியாக நிற்பது காங்கிரஸ்ஸிற்கு நன்மையே!




மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, March 4, 2011

தினமலரின் கேவலமான செய்தி தலைப்பு!


செய்தியை பார்த்தால், 

கோவை ஒண்டிப்புதூர், நேருநகர் இரண்டாவது வீதியில் வசிப்பவர் கணபதி கவுண்டர் (93); மனைவி நஞ்சம்மாள் (88). இவர்களுக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேரு நகர் வீட்டில், வயதான தம்பதியினர் மட்டுமே வசிக்கின்றனர்.


மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, நஞ்சம்மாள், கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி காலை, வீட்டை விட்டு வெளியே சென்ற நஞ்சம்மாள் திரும்பவில்லை. குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம், சிங்காநல்லூர் போலீசில், கணபதி கவுண்டர் புகார் கொடுத்தார். நஞ்சம்மாளை, போலீசார் தேடுகின்றனர். 


இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? மனைவி காணாமல் போய்விட்டால் வயதானவரானால் தேடக்கூடாதா? 
பரபரப்புக்காக எதையும் எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த முதியவர் இவர்கள் மீது வழக்கு தொடுத்தால், மூன்றாம் பக்கம் யாரும் பொதுவாக பார்க்காத இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு மன்னிப்பு கேட்டு விடுவார்கள். 

இவர்களை புறக்கணிக்க வேண்டும்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...