Saturday, January 22, 2011

வீரப்ப மொய்லி - இரட்டை நாக்கு!


இந்த செய்தி, முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களின் மருமகன் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பற்றியது. இந்த செய்தியின் சாரம் : வீரப்ப மொய்லி சொல்வது என்ன என்றால், "இந்த குற்றசாட்டுகள் எந்த அளவிற்கு உண்மை என்று தீர விசாரிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் நான் அதை பற்றி சொல்வது முறையாகாது". இது சென்ற மாதக்கடைசியில்.

இதே போல இன்னொரு செய்தி, எடியூரப்பா மற்றும் அவர் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு சம்பந்த பட்டது. இந்த செய்தியில் வீரப்ப மொய்லி எடியூரப்பா கிட்ட தட்ட குற்றவாளி என்ற முடிவிற்கே வந்து விட்டார்! இவர் மீதும் இன்னும் எந்த குற்றசாட்டும் நிரூபணமாகவில்லை.

என்ன, எடியூரப்பா எதிர் கட்சி. பாலக்ருஷ்ணன் அப்படி இல்லை! 

போடோவில் மொய்லி. ஒட்டு போட்டதோடு உங்கள் கடமை முடிந்தது. மூடிகிட்டு இருங்க என்கிறாரா?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

அதே தான் ஆ ராசாவுக்கும் !!!!

bandhu said...

முற்றிலும் சரி! வருகைக்கு நன்றி.