Saturday, January 15, 2011

மாண்டேக் சிங் அலுவாலியா!



இத்தனை நாள் அரசியல் வாதிகள் 2G விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தது போதாது என்று இப்போது இவரும் இதற்கு ஒத்து ஊதுகிறார்! 

இதில் இவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் SWAN மற்றும் UNITECH கம்பனிகள் பாதிக்கும் கீழான பங்கை ஏகப்பட்ட விலைக்கு விற்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வது, அந்த அதிக பணம் promoter களுக்கு தரப்படவில்லை. அந்த கம்பெனியிலேயே இருக்கிறது. இது வேறு. பணம் கொடுத்து பங்கு வாங்குவது வேறு என்று. 

ஒரு கடை நடத்துகிறீர்கள். ஒரு வருடம் கழித்து வேறொருவர் பங்கு தாரராக சேர வருகிறார். கடையின் அப்போதைய மதிப்பில் பாதியை அவரை தர சொல்லி அவரை பாதி பங்குதாரராக்கி கொள்கிறீர்கள். அப்போது அவர் கொண்டு வந்த பணத்தை உங்களிடம் கொடுக்காவிட்டாலும் அதன் மீது உங்களுக்கு உள்ள உரிமை எப்போதும்  உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. 

சேரும்போது கொடுக்கும் பணம் அந்த கம்பனியின் அன்றைய மதிப்பின் படி கொடுப்பது. கொடுத்தபின் இந்த மாதிரி கதை விடுவது மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியே!

ஒன்று மட்டும் முழுமையாக தெரிகிறது. காங்கிரஸ்ஸின் பங்கு கைக்கு வந்து விட்டது. பூசணிக்காயை முழுமையாக மறைக்க பார்க்கிறார்கள். 

மாண்டேக் போன்றவர்களுக்கு பாரதி அன்றே சொன்னான், படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: