Friday, January 21, 2011

நகை முரண்!


இன்றைய தினமலரில் வந்தது.. 
ஊழலை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் விவசாய அமைச்சர் சரத்பவார், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதில் இருக்கும் எவருக்காவது இந்த குழுவில் பங்கு பெற தகுதி உண்டா? சரத் பவார் பற்றி ஈ எறும்புக்கு கூட தெரியும். வீரப்ப மொய்லி ராஜாவிற்கு பரிந்து வந்தவர். பிரச்சனையை பெரியாதானவுடன் அதை பற்றி பேசாமல் நழுவுபவர். அழகிரி பற்றி சொல்லவே வேண்டாம். 

இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பரிந்துரைகள் வழங்குவார்களாம். 

திருடர்களையே   திருட்டை குறைக்க வலி கேட்கும்  விசித்திரமான ஜனநாயகம் இந்தியாவில்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: