Friday, March 4, 2011

தினமலரின் கேவலமான செய்தி தலைப்பு!


செய்தியை பார்த்தால், 

கோவை ஒண்டிப்புதூர், நேருநகர் இரண்டாவது வீதியில் வசிப்பவர் கணபதி கவுண்டர் (93); மனைவி நஞ்சம்மாள் (88). இவர்களுக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேரு நகர் வீட்டில், வயதான தம்பதியினர் மட்டுமே வசிக்கின்றனர்.


மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, நஞ்சம்மாள், கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி காலை, வீட்டை விட்டு வெளியே சென்ற நஞ்சம்மாள் திரும்பவில்லை. குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம், சிங்காநல்லூர் போலீசில், கணபதி கவுண்டர் புகார் கொடுத்தார். நஞ்சம்மாளை, போலீசார் தேடுகின்றனர். 


இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? மனைவி காணாமல் போய்விட்டால் வயதானவரானால் தேடக்கூடாதா? 
பரபரப்புக்காக எதையும் எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த முதியவர் இவர்கள் மீது வழக்கு தொடுத்தால், மூன்றாம் பக்கம் யாரும் பொதுவாக பார்க்காத இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு மன்னிப்பு கேட்டு விடுவார்கள். 

இவர்களை புறக்கணிக்க வேண்டும்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: