Friday, March 9, 2018

மோடி அரசு. - ஒரு அலசல்



முதலில் ஒரு Disclaimer. நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். என் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

மோடி அவர்களின் மிகப்பெரிய வாக்குறுதி.. "நானும் தின்ன மாட்டேன். மற்றவர்களையும் தின்ன விட மாட்டேன்." அதாவது, நானும் ஊழல் செய்யமாட்டேன். மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்.

ஊழல் ஒரு பிரச்சனையா ?

அதிர்ச்சியாக இருந்தாலும், மக்கள் இதை பிரச்சனையாக பார்ப்பதில்லை என்பதே உண்மை. ஜெ , கருணாநிதி, காங்கிரஸ்.. என்று ஊழல் செய்தது உள்ளங்கை நெல்லிக்கனி போலவோ புறங்கையை நக்கியது போலவோ வெளிப்படையாகவோ தெரிந்தாலும் மக்கள் அதன் பின்னரும் ஓட்டு போட்டிருக்கிறார்கள்

பிறகு என்ன தான் பிரச்சனை?

நான்  தனிப்பட்ட முறையில் எதில் பாதிக்கப் படுகிறேனோ, அது தான் எனக்குப் பிரச்சனை!

இதனால் தான், ஜெயலலிதா நேரடியாக மக்கள் பாதிக்கப் படும் எதிலும் கை வைக்கவில்லை. முன்னால் கை வைத்த போதெல்லாம் அடி வாங்கினார் (உயிர்பலி தடை / அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்).

நேரடியாக பலன் தரும் திட்டங்களில் (அம்மா உணவகம். சத்துணவு. கலைஞர் தொலைக்காட்சி) உடனடியாக நல்ல பெயர் கிடைப்பது அதனால் தான். 

ஊழல் எப்போது பிரச்சனை ஆகிறது என்றால் வெளிப்படையாக அது அப்பட்டமாக வெளிக் காட்டிக் கொள்ளப் படும்போது , Flaunt செய்யப் படும்போது. (கருணாநிதியின் வாரிசுகள் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர்கள் ஆனது / ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரம்)

இப்போது மோடி அரசைப் பார்க்கலாம்

மோடி அரசின் மிகப் பெரிய தவறாக ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை காண்கிறேன். கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டார்கள். பெரிய அளவு நல்லது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. பலன் என்ன கிடைத்தது என்பதை விளக்கவோ, பலன் இல்லாததற்கு வருத்தம் தரவோ மோடி முன்வரவில்லை என்பது அநியாயம்!

அதே போல் GST. எவ்வளவு குழப்பம்! இதுவரை நான்கு முறை பட்டியலிட்ட பொருட்கள் மாறிவிட்டது. Again, கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இப்போது தேசிய வங்கிகள் ஒவ்வொன்றாக வாராக்கடன் பட்டியல் வெளியிடும்போது, இவர் அரசும் ஊழலில் குறைந்ததில்லை என்று தோன்றுகிறது!

அடுத்தது கிட்ட தட்ட ஐந்து வருட தேர்தல் பிரச்சாரமாக அரசை நடத்துகிறார்.

நல்லது நடந்திருக்கிறது. அல்லதும் நடக்கிறது. எல்லோர் அரசைப் போலவே.

அடுத்து காங்கிரஸ் வந்துவிடுமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை!

ராகுல் மட்டுமே அதை தடுக்க முடியும், வாயை திறக்காமலிருந்தால்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்...

Avargal Unmaigal said...

மோடியை நான் பலமாக எதிர்த்தாலும் சில சமயங்களில் நான் நினைத்தது என்னவென்றால் மக்களின் ஆமோக ஆதர்வு பெற்று வெற்றி பெற்று இருக்கிறார் அதற்கு நன்றிகடனுக்காகவது கொஞ்சமாவது நல்லது செய்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை ஆனால் மக்களிடையே மதவாதத்தை தூண்டும் விதங்களைல் செயல்படாமல் இருந்தாலே போதும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அதையும் அவர் செய்யமாட்டார் என்று கருதுகிறேன்