Wednesday, February 6, 2013

மனதை சுற்றி வரும் பாடல்



இதோ இன்னுமொரு பாடல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆனால் ஒரு வார்னிங். கேட்ட உடன் கால எந்திரத்தில் பின்னோக்கி ஒரு ஐம்பது வருஷம் போய்விடுவீர்கள்! வீடியோவை பார்க்காமல் கண் மூடி இந்த பாட்டை கேட்டாலும் பின்னோக்கி போக முடிவது ஆச்சர்யம்..


கண்மூடி என்றவுடன் ஞாபகம் வருகிறது. பெண்குரல் பாடகர் வைக்கம் விஜயலக்ஷ்மி. பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். வெறும் பத்து வயதிற்குள்ளாகவே நானூறுக்கும் மேற்பட்ட கச்சேரி செய்திருக்கிறார். கடந்த பதினெட்டு வருடங்களாக குருவாயூர் செம்பை சந்கீதோத்சவத்தில் பாடி வருகிறார்.

இதே பாடல் Making of the Song வீடியோவில்..



என்ன ஒரு அருமையான குரல்!  அவ்வப்போது மனச்சோர்வு வரும்போதெல்லாம் பிறவியிலே குறைகளுடன் படைக்கப்பட்டவர்களையே நினைத்துக்கொள்கிறேன்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

குட்டன்ஜி said...

உண்மைதான்!பின்னோக்கிப்பயணம் நிச்சயம்!
ரசித்தேன்

bandhu said...

வருகைக்கு நன்றி, குட்டன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பாடல். மனதை அப்படியே மயக்கி பின்னோக்கி அழைத்துச் சென்றது.....

bandhu said...

ஆமாம் வெங்கட். அதுவும் பார்வை இல்லாதவர் என்று அறியும்போது பாடல் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது!

Unknown said...

சூப்பர் பாட்டு.....

bandhu said...

வருகைக்கு நன்றி, சுரேஷ்..