Monday, April 4, 2011

2G - நார்வே மிரட்டல்!


சிபிஐ பதித்த குற்ற பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்று Unitech. இந்த நிறுவனத்தை 6,120 கோடி கொடுத்து நார்வேயை சேர்ந்த Telenor நிறுவனம் வாங்கியது. இதை வாங்கியபோது இந்த நிறுவனத்திற்கு Unitech செய்த தில்லுமுல்லு எதுவும் தெரியாது.அதனால் அந்த நிறுவனத்திற்கு கொடுத்த லைசென்ஸ்சை ரத்து செய்ய கூடாது என்று நார்வே நாட்டு பிரதம மந்திரி நமது பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார் (இவரும் கடிதம் தானா? இன்னும் எத்தனை பேர்டா கெளம்பியிருக்கீங்க?)

வெறும் கடிதம் மட்டுமில்லை. மிரட்டியுமிருக்கிறார். எப்படி? லைசென்ஸ் ரத்து பண்ணினால் அயல் நாட்டிலிருந்து வரும் முதலீடுகள் வருவது தடை படும் என்று. 

முதலில், ரத்து செய்வது தவறே இல்லை. ஒரு கம்பனியை வாங்கும்போது அதன்    
சொத்து மற்றும் கடனை சேர்த்தே வாங்குகிறார்கள். அந்த கம்பெனியின் லாபத்திற்கு எப்படி சொந்தக்காரரோ அதன் ரிஸ்கிர்க்கும் வாங்கியவர்களே பொறுப்பாளர்கள்.  அதனால், ரத்து செய்யப்படும் என்ற ரிஸ்க் வாங்கியவர்களை சேர்ந்தது. ரத்து செய்வதில் தப்பில்லை. 

இரண்டாவது, இந்தியாவின் வழக்கு எப்படி தீர்ப்பளிக்கப்படவேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? 

இதை மன்மோகன் சொல்ல வேண்டும். கொஞ்சமாவது முதுகெலும்பிருந்தால் சொல்வார். ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments: