Sunday, February 13, 2011

யுத்தம் செய்!


தமிழில் இது வரை வந்த மிக சில Crime Thriller வகை படங்கள் பெரும்பாலும் நேர் கோட்டில் செல்லும் கதையை வைத்தே வெளி வந்துள்ளன. அதாவது குற்றங்களின் நிகழ்வு. துப்பறிதல். வில்லனை அடைதல் என்ற நேர் கோட்டிலேயே பயணித்துள்ளன.
பெரும்பாலும் மற்ற எல்லாவற்றையும் காட்டி விட்டு முகத்தை மட்டும் காட்டாதது மட்டும்  பெரிய சஸ்பென்ஸ் - ஆக இருந்து வந்துள்ளது.

இவை இரண்டு விஷயத்திலுமே முற்றிலும் மாறு பட்ட படம் யுத்தம் செய்!
ஒரு விஷயத்தை சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக கதையை வளர்த்து கிட்ட தட்ட பாதி படத்தில் அதற்க்கு முற்றிலும் மாறான கோணத்தில் கதை திருப்பவதில் மிஸ்கின் பெரிய வெற்றி பெற்றுள்ளார்! த்ரில்லர் வகை படங்களில் முன்னோடியான Psycho படத்தில் இதே உத்தியை கையாண்டிருப்பார் ஹிட்ச்காக்! இது கத்தி மேல் நடப்பது போன்றது. இதில் முக்கிமானது இந்த மாறுபட்ட கோணங்களின் blending and transition. இந்த விதத்தில் மிஸ்கின் அருமையாக இதை கையாண்டிருக்கிறார்!

இரண்டாவது பார்வையாளர்களை உள்ளிழுக்கும் கலை. பார்ப்பவரும் புத்திசாலிதான். எல்லாவற்றையும் சொல்லித்தான் விளக்கவேண்டும் என்பதில்லை. Being suggestive than being explicit adds an element of mystery and when the viewer understands that suggestive thing, he feels better about the story as well as himself! Sixth Sense படத்திலும் சியாமளன் இதை பண்ணியிருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக நாமும் இந்த படத்தில் ஒரு பாகமாகி விடுகிறோம்!

யாரை எந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிஸ்கின் தேர்வு செய்வது அவரின் மிக பெரிய பலம்! மிக புத்திசாலித்தனமாக he exploits the off screen image! இதிலும் அவர் மிக வித்தியாச படுகிறார். எல்லோரும் Y G Magendra வை ஒரு நகைச்சுவை நடிகராக பார்த்த போது, தொலைகாட்சியில் ஒரு நல்ல character role artist -ஆக பார்த்த போது, மிஸ்கின் அந்த பிம்பத்தை மட்டும் மிக அழகாக உபயோக படுத்தியுள்ளார்! ஒரு மென்மையான மனிதர் மூர்கமாக மாறுவதை காட்டும்போது அதன் maximum effect இந்த casting -இனால் வருகிறது!

மொத்தத்தில், யுத்தம் செய் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்!

மிஸ்கின் should be proud of this achievement!

Thursday, February 3, 2011

பூனை குட்டி வெளியே வந்து விட்டதா?



இங்கு இருக்கும் செய்தி முதன் முறையாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியை சம்பந்த படுத்தியிருக்கிறது! இதில் கூறியது உண்மையாக இருந்தால் தப்புவது கஷ்டம் போல் உள்ளது

Chinese பழமொழி ஒன்றில்   சொல்வது போல், we are living in interesting times!

Thursday, January 27, 2011

அவங்க மட்டும் ஒழுங்கா?



கருணாநிதியின் சமாளிப்புகள் பெரும்பாலும் மூன்று வகை. 

ஒன்று. மற்றவர்கள் மட்டும் ஒழுங்கா? அவர்களும் இதே லட்சணம் தான் என்பது ஒன்று. விலை வாசி புள்ளி விவரம் சொன்னால், மற்ற மாநிலங்களில் தனக்கு சாதகமானவற்றை சொல்வதும் இதில் சேர்த்தி!
இரண்டாவது. இதற்கெல்லாம் காரணம் ஆரியர் என்பது! அது எதுவானாலும்.
மூன்றாவது. கேள்வி கேட்டவரை சந்தேகத்துக்கு உள்ளாக்குவது! 

இன்றைய கேள்வியும் நானே பதிலும் நானேவில் முதல் வகை சமாளிப்பிற்கு சாம்பிள்கள் சில..  

இலவசங்கள் என்ற பெயரில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வரும், தி.மு.க., அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?


இந்த ஆண்டு கூட மேற்குவங்க அரசு வாங்கியுள்ள கடன் தொகை 16 ஆயிரத்து 260 கோடி ரூபாய். தமிழ்நாடு பெற்ற கடன் 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய். இதிலிருந்து எந்த மாநில கடன் சுமையை மக்கள் தலையிலே ஏற்றி உள்ளது என்பதை பாண்டியன் நடுநிலையோடு கூறுவாரா? கடந்த 2001, 2002ம் ஆண்டில் எனது தலைமையிலான, அரசு விட்டுச் சென்ற கடந்த 32 ஆயிரம் கோடி ரூபாய். அந்தக் கடன் 2005, 2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க., ஆட்சி பதவியில் இருந்து நீக்குகின்ற காலக் கட்டத்தில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா? அந்தக் கட்சியோடு கூட்டணி சேர தா.பாண்டியன் சென்றிருப்பது எந்த அடிப்படையிலே நியாயம்? நியாயத்தைப் பாண்டியனிடம் கேட்க முடியுமா?


வழக்கம் போலத்தான்! அவர்களும் கடன் வாங்கினார்கள். நானும் வாங்கினேன். என்ன தவறு?


மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று ஹெலிகாப்டரிலேயே திரும்பியிருக்கிறாரே?


தமிழகத்திலே இது வரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க., ஆட்சி நடை பெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக 1991, 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடை பெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதில் எந்த ஒரு மீனவர் வீட்டுக்காவது, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், ரயிலிலோ, காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா? வேஷமா? ஆறுதல் கூறப் போன இடத்திலே கூட தான் ஆட்சிக்கு வர மீனவர்கள் ஓட்டு அளிக்க வேண்டுமென்று தான் ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார்.

திருமண விழாக்களில் அரசியல் மட்டுமே பேசுவதும் எந்த முறையில் சேர்த்தியோ! 


Saturday, January 22, 2011

முதல்வரின் அறிவிப்பு!


முதல்வரின் இன்றைய அறிவிப்பினால் தமிழகத்தில்  எதிர்பாராத திருப்பங்கள் நடை பெற்றுள்ளன. ஆகாயத்தையும் தாண்டுமோ என்று எல்லோரும் நினைத்த விலைவாசி இந்த அறிவிப்பினால் பெரும் சரிவை சந்திக்க உள்ளது. 
தெருவெங்கும் இருக்கும் டாஸ்மார்க்கினால் மக்கள் கெட்டழியும் நிலையும் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இந்த அறிவிப்பின் மூலம் பெரும் மாற்றம் காணும் என்பது உறுதி. 
அகில இந்தியாவே பெட்ரோல் விலை உயர்வை சந்திக்க முடியாமல் முழிக்கும்போது முதல்வரின் இந்த அறிவிப்பு இதற்க்கு ஒரு தீர்வு காண்கிறது. பெட்ரோல் விலை குறையும் என்பதால் எல்லா பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்பதால் மாணவர்களிடையே பெரும் சரிவை சந்தித்திருக்கும்  கற்கும் ஆர்வம், இந்த அறிவிப்பின் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார் முதல்வர். சமீபத்தில் ஒரு பதிவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத படிக்க கூட தெரியவில்லை என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தினம் ஒரு இலவசம் என்று எதிர்பார்த்து மக்கள் வாழும் சுயமரியாதையும் உழைக்கும் ஆர்வமும் அற்ற சமுதாயத்திற்கு இந்த அறிவிப்பின் மூலம் தீர்வளித்திருக்கிறார் முதல்வர். 
கிட்ட தட்ட ஆயிரம் விவசாயிகள் கடந்த சில வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட துயரம் இந்த அறிவிப்பினால் முடிவிற்கு வந்திருக்கிறது.
ரேஷனில் கிடைக்கும் அரிசியை விட கட்டடம் கட்ட தேவையான மணல் அதிக விலை விற்கும் அதனால் கட்ட தொழிலினால் பாதிப்படைவது இதனால் முடிவிற்கு வரக்கூடும்.
தமிழ் நாடெங்கும் விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட் பிளாட்டக மாறுவதும், தினம் அதிகரிக்கும் சாலை போக்குவரத்தும், என், ஈழ தமிழர்களின் அல்லல் கூட இந்த அறிவிப்பினால் மாறலாம்.

அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?


எவ்வளவோ பிரச்சனைகளால் மக்கள் அன்றாடம் அவதிப்படும்போது முதல்வரின் இந்த 'பொறுப்பான' அறிவிப்பு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடும் தானே?



வீரப்ப மொய்லி - இரட்டை நாக்கு!


இந்த செய்தி, முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களின் மருமகன் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பற்றியது. இந்த செய்தியின் சாரம் : வீரப்ப மொய்லி சொல்வது என்ன என்றால், "இந்த குற்றசாட்டுகள் எந்த அளவிற்கு உண்மை என்று தீர விசாரிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் நான் அதை பற்றி சொல்வது முறையாகாது". இது சென்ற மாதக்கடைசியில்.

இதே போல இன்னொரு செய்தி, எடியூரப்பா மற்றும் அவர் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு சம்பந்த பட்டது. இந்த செய்தியில் வீரப்ப மொய்லி எடியூரப்பா கிட்ட தட்ட குற்றவாளி என்ற முடிவிற்கே வந்து விட்டார்! இவர் மீதும் இன்னும் எந்த குற்றசாட்டும் நிரூபணமாகவில்லை.

என்ன, எடியூரப்பா எதிர் கட்சி. பாலக்ருஷ்ணன் அப்படி இல்லை! 

போடோவில் மொய்லி. ஒட்டு போட்டதோடு உங்கள் கடமை முடிந்தது. மூடிகிட்டு இருங்க என்கிறாரா?

Friday, January 21, 2011

நகை முரண்!


இன்றைய தினமலரில் வந்தது.. 
ஊழலை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் விவசாய அமைச்சர் சரத்பவார், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதில் இருக்கும் எவருக்காவது இந்த குழுவில் பங்கு பெற தகுதி உண்டா? சரத் பவார் பற்றி ஈ எறும்புக்கு கூட தெரியும். வீரப்ப மொய்லி ராஜாவிற்கு பரிந்து வந்தவர். பிரச்சனையை பெரியாதானவுடன் அதை பற்றி பேசாமல் நழுவுபவர். அழகிரி பற்றி சொல்லவே வேண்டாம். 

இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பரிந்துரைகள் வழங்குவார்களாம். 

திருடர்களையே   திருட்டை குறைக்க வலி கேட்கும்  விசித்திரமான ஜனநாயகம் இந்தியாவில்!

Monday, January 17, 2011

முரளி தியோரா!


எவ்வளவு நாள் ஒரே பொய்யை சொன்னால் அது உண்மையாகும்? 

இங்கு முரளி தியோரா சொல்வது இந்தியாவின் பெட்ரோல் கம்பனிகள் நிறைய நஷ்டத்தை அடைவதால் பெட்ரோல் விலை உயர்வை தவிர வேறு வழியில்லை! எத்தனையோ முறை - வினவு மற்றும் பலர், ஏன் நான் கூட  - பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் அரசு விதிக்கும் வரிதான் என்று சுட்டி காட்டிய பிறகும், அரசுக்கு சொந்தமான இந்த கம்பனிகள் நஷ்டமடைகிறது என்று சொல்வது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்!

ஒரு கையில் அரசு வரி விதித்து விலையை உயர்த்திவிட்டு, வரி போக அந்த நிறுவனங்களுக்கு போகும் வருமானம் கம்மி. அதனால் மேலும் விலையை உயர்த்துகிறோம் என்று அறிவிக்கிறார்?

இது போன்ற அண்ட புளுகு மந்திரிகளை என்ன செய்யலாம்?