Thursday, April 7, 2011

இதோ இன்னொரு காந்தி!



இன்று நம்மிடையே தோன்றியுள்ள இன்னொரு  காந்தி பற்றி பாலா  எழுதிய பதிவு இது.. 



புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார். 


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.

ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.

அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது

துனிசியா, எகிப்து, லிபியா நாடுகளில் கிளம்பிய புரட்சியின் இந்திய வடிவமாக இந்த புரட்சியை பரவலாக்குவோம்! இது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஜெய் ஹிந்த்!


Monday, April 4, 2011

2G - நார்வே மிரட்டல்!


சிபிஐ பதித்த குற்ற பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்று Unitech. இந்த நிறுவனத்தை 6,120 கோடி கொடுத்து நார்வேயை சேர்ந்த Telenor நிறுவனம் வாங்கியது. இதை வாங்கியபோது இந்த நிறுவனத்திற்கு Unitech செய்த தில்லுமுல்லு எதுவும் தெரியாது.அதனால் அந்த நிறுவனத்திற்கு கொடுத்த லைசென்ஸ்சை ரத்து செய்ய கூடாது என்று நார்வே நாட்டு பிரதம மந்திரி நமது பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார் (இவரும் கடிதம் தானா? இன்னும் எத்தனை பேர்டா கெளம்பியிருக்கீங்க?)

வெறும் கடிதம் மட்டுமில்லை. மிரட்டியுமிருக்கிறார். எப்படி? லைசென்ஸ் ரத்து பண்ணினால் அயல் நாட்டிலிருந்து வரும் முதலீடுகள் வருவது தடை படும் என்று. 

முதலில், ரத்து செய்வது தவறே இல்லை. ஒரு கம்பனியை வாங்கும்போது அதன்    
சொத்து மற்றும் கடனை சேர்த்தே வாங்குகிறார்கள். அந்த கம்பெனியின் லாபத்திற்கு எப்படி சொந்தக்காரரோ அதன் ரிஸ்கிர்க்கும் வாங்கியவர்களே பொறுப்பாளர்கள்.  அதனால், ரத்து செய்யப்படும் என்ற ரிஸ்க் வாங்கியவர்களை சேர்ந்தது. ரத்து செய்வதில் தப்பில்லை. 

இரண்டாவது, இந்தியாவின் வழக்கு எப்படி தீர்ப்பளிக்கப்படவேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? 

இதை மன்மோகன் சொல்ல வேண்டும். கொஞ்சமாவது முதுகெலும்பிருந்தால் சொல்வார். ஆனால் இருப்பது போல் தெரியவில்லையே!


Thursday, March 24, 2011

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?




தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கிறது. இதே தேர்தல் கமிஷன், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்களை எதிர்த்து ஒன்றும் சொல்வதில்லை.


இந்த தேர்தலில் தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 35 கிலோ அரிசி - ஏழை மக்களுக்கு
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • இன்ஜினியரிங் மாணவர்கள் எல்லோருக்கும் லேப்டாப்
  • மீனவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி அல்லது கிரைண்டர் 
...மற்றும் பல.. 


அ தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
  • 20 கிலோ அரிசி - எல்லா குடும்பங்களுக்கும்
  • பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
  • 12 -ஆம் வகுப்பு மானவர்களிலுருந்து அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி
  • குறைந்த விலையில் கேபிள் 
  • ஏழை மக்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்....
..மற்றும் பல..

இதில் இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்டது, அனைத்தும் அரசு பணத்தில் என்பதை. 

ஆனால், தேர்தலுக்கு முன் கொடுக்கும் பணம் அரசு பணம் இல்லை. அவரவர்கள் சம்பாதித்த  பணம். 

இப்படி இருக்கும்போது  தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடை செய்வது சரியா? தடை செய்வது அரசியல் வாதிகளுக்கு நன்மையாகவே முடிகிறது!

நீங்களே சொல்லுங்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?



Thursday, March 17, 2011

புள்ளி(யில்லாத) ராஜா!



விகிலீக்ஸ் இந்தியா குறித்து  வெளியிட்டுள்ள  ரகசியங்களில் பெரிய அளவு பரபரப்பை உருவாக்கி இருப்பது, பார்லிமென்ட்-இல் ஒரு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட லஞ்சம் கொடுத்த விவகாரம். மன்மோகன் பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் (உண்மை தானே) என்று பி ஜே பி , கம்யூனிஸ்ட் என்று எல்லோரும் உரக்க குரல் கொடுக்கிறார்கள். 

மன்மோகன் வழக்கம் போல், 'எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா' என்று பேசாமல் இருக்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி, இதற்கு பதிலளிக்கையில்  எதிர்கட்சிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். Manmohan Singh is a "spotless Prime Minister" என்று கூறியுள்ளார். "spotless prime minister" என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இது இல்லை என்றாலும், மன்மோகன் சிங்கிற்கு பொருந்தக்கூடிய மொழிபெயர்ப்பு..

மன்மோகன் சிங் ஒரு "புள்ளியில்லாத ராஜா"!


தி மு க வுடன் அ தி மு க கூட்டணி?




ஸ்பெக்ட்ரம் ஊழல், திரையுலகில் எப்போதுமில்லாத அளவு ஆக்கரமிப்பு, நாளும் உயரும் விலைவாசி, ஈழப்படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமில்லாது அவற்றை நடத்த துணை போனது, நாளும் நடக்கும் மீனவ படுகொலை என்று எவ்வளவோ விஷயங்கள் தி மு க விற்கு எதிரே.

அவற்றின் துணையால் வெற்றி கோப்பை தட்டில் வரும்போது, அது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது (பெட்டி) ஏற்கனவே கிடைத்துவிட்டது என்பது போல் இருக்கிறது ஜெ வின் நடவடிக்கைகள். 

கூடவே இருந்த வை கோ விற்கு கை விரிப்பு, முதலில் கூட்டணி அமைக்க வந்த கார்த்திக்கிற்கு அல்வா, கடைசியில் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்த தான் தோன்றி தனம்.. 

எல்லாவற்றிற்கும் இரு காரணங்களே இருக்க முடியும். ஒன்று, தன் வெற்றி உறுதி என்ற ஓவர் கான்பிடன்ஸ். இல்லையேல், தி மு க வுடன் ரகசிய கூட்டணி. 

இரண்டுமே யாருக்கும் (தி மு க தவிர) நல்லதில்லை!

Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு, காங்கிரஸ்ஸிற்கு முடிவு?



காங்கிரஸ் - தி மு க இடையே கூட்டணி முறிந்துள்ளது. அவசர அவசரமாக இணையலாம். அப்படி இல்லாமல் போனால் காங்கிரஸ்ஸிற்கு இதனால் என்ன பாதிப்பு என்று கொஞ்சம் அலசலாம். 

எல்லோருக்கு தெரிந்த ஒரு விஷயம், தனியாக நின்றால் மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரஸ் வெல்ல முடியும். சொல்லப்போனால் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம். இது காங்கிரஸ்ஸிர்க்கும் தெரிந்ததே. அதற்க்கு பின்னாலும் இப்படி அவர்கள் முறுக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம்?

ஒன்று, காங்கிரஸ்ஸின் மிகப்பெரிய பிரச்சனை கோஷ்டி சண்டைகள். இதற்க்கு காரணம், தொண்டர்களை விட தலைவர்கள் நிறைய! ஒரு சின்ன பட்டியல்,
தங்கபாலு
வாசன்
சிதம்பரம்
இளங்கோவன்
ஜெயந்தி நடராஜன்
....
இவர்களுக்கு அடுத்த லெவலில்
யசோதா
ஞானசேகரன் 
வசந்த் & கோ - வசந்த் 
...
இன்னும் சட்டென்று பட்டியலிட முடியாத மேலும் 20-30 பெயர்கள். இந்த தலைவர்களின் உண்மையான செல்வாக்கு என்ன என்று தேர்தலில் தனியாக நின்றால் கச்சிதமாக கணிக்க முடியும்,.  தேர்தலில் தோற்ற பிறகு, செல்வக்கில்லாதவர்களை எளிதில் களையெடுக்க முடியும். 

எல்லோரும் சொல்வது போல் பீகாரில் காங்கிரஸ் ஸி ற்கு பிரம்மாண்ட தோல்வி என்று சொல்ல முடியாது. என்ன முன்னர் 4 M L A இருந்தார்கள். இப்போது 2 தான். ஆனால், அங்கு இருக்கு வேற்று வெட்டு தலைவர்களை அடையாளம் காண தேர்தல் வழி வகுத்து விட்டது. அதை தான் இந்த தேர்தல் இங்கு செய்யும். 

இரண்டு, கருணாநிதிக்கு பிறகு தி மு க பல பிரிவாக பிரிந்து விடும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் ஒன்றும் இல்லை. அதனால், கருணாநிதிக்கு பிறகு வரும் வெற்றிடத்தை நல்ல முறையில் காங்கிரஸ் உபயோகப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் தனியாக நின்றால், காங்கிரஸ் திராவிட கட்சிகளுக்கு நல்ல ஒரு மாற்றாக காட்சி அளிக்கும். இன்றைய  தேதியில் அப்படி யாரும் இல்லை என்பதே உண்மை!

மூன்றாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி மு க மட்டுமே காரணம் என்று எளிதில் கை கழுவி விடலாம். ஓர் அளவிற்கு மேல் தி மு க வும் எதுவும் செய்ய முடியாது. சோனியா இந்த ஊழலில் பங்கு பெற்றிருந்தால் கருணாநிதியும் பங்கு பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினால் இருவருமே மாட்டிக்கொள்வார்கள். அதனால், மேலும் மேலும் குட்டையை குழப்புவார்களே ஒழிய வெளிப்படையாக ஒன்றும் நடக்காது!

எல்லாவற்றையும் பார்த்தால், நீண்ட நாள் திட்டப்படி தனியாக நிற்பது காங்கிரஸ்ஸிற்கு நன்மையே!




Friday, March 4, 2011

தினமலரின் கேவலமான செய்தி தலைப்பு!


செய்தியை பார்த்தால், 

கோவை ஒண்டிப்புதூர், நேருநகர் இரண்டாவது வீதியில் வசிப்பவர் கணபதி கவுண்டர் (93); மனைவி நஞ்சம்மாள் (88). இவர்களுக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேரு நகர் வீட்டில், வயதான தம்பதியினர் மட்டுமே வசிக்கின்றனர்.


மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, நஞ்சம்மாள், கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி காலை, வீட்டை விட்டு வெளியே சென்ற நஞ்சம்மாள் திரும்பவில்லை. குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம், சிங்காநல்லூர் போலீசில், கணபதி கவுண்டர் புகார் கொடுத்தார். நஞ்சம்மாளை, போலீசார் தேடுகின்றனர். 


இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? மனைவி காணாமல் போய்விட்டால் வயதானவரானால் தேடக்கூடாதா? 
பரபரப்புக்காக எதையும் எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த முதியவர் இவர்கள் மீது வழக்கு தொடுத்தால், மூன்றாம் பக்கம் யாரும் பொதுவாக பார்க்காத இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு மன்னிப்பு கேட்டு விடுவார்கள். 

இவர்களை புறக்கணிக்க வேண்டும்!