Saturday, September 22, 2012

நமக்கெல்லாம் சுரணையே இல்லையா?



நான் முன்னொரு காலத்தில் யூனியன் ஆதிக்கமில்லாத ஒரு அரசு நிறுவனத்தில் பணி புரிந்தபோது கேட்டது. ஒருவர் அந்த நிறுவனத்தின் எச் ஆர் தலைவரை, யூனியன் ஆதிக்கமில்லாததை எப்படி சாதித்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர், இளைஞ்சர்கள் வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர்கள் தலையை தூக்க முடியாத அளவு வேலை கொடுத்து பிசியாக வைத்திருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாம் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்றாராம்.

இன்று இந்தியாவில் நடப்பதை பார்த்தால் அந்த எச் ஆர் தலைவரின் சூழ்ச்சி போல ஒன்று தான் இந்தியாவின் தற்போதய நிலைமைக்கு காரணம் என்று தோன்றுகிறது!

யோசித்துப்பார்த்தால், கார், பர்னிச்சர் செட் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர என் அப்பாவின் இப்போதைய என் வயது வாழ்க்கைக்கும் இப்போது என் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை! இருந்தும், அவருக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது போலவும் இப்போது எனக்கு இல்லாமல் இருப்பது போலவும் இருக்கிறது. இது எனக்கு மட்டும் பொருந்தவில்லை. என் நண்பர்கள் பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தினப்படி வாழ்க்கையே ஓட்டமாக இருக்கும்போது எப்படி போராடுவது?

நமக்கு எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரமாகவாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எரிச்சலூட்டும் அரசியல் வாதிகள். மன்மோகனின் பேச்சை கேட்டீர்களா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், மானம் எதுவுமே இருக்காதா? நேர்மையான நிர்வாகமே வளர்ச்சி தரும் என்று கொஞ்சமும் கூசாமல் எப்படி இவரால் சொல்ல முடிகிறது? திருப்பி திருப்பி சொல்லவே அலுப்பு தட்டும் அளவுக்கு ஊழல்கள்! 

இவர் ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மறுபடி மறுபடி ஊழல் செய்து, ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று மக்களை நினைக்க வைப்பது தான்!  அதைவிட பெரிய விஷயம், இது வரை எந்த அரசியல் வாதியும் மாட்டவில்லை! குற்றம் நிரூபணம் ஆகும் வரை குற்றவாளி இல்லை. அவ்வளவு சீக்கிரம் குற்றம் நிரூபணம் ஆக விடமாட்டோம் என்று நடந்து கொள்ளும் அரசு! சி பி ஐ என்பது வாசலில் கட்டி வைத்திருக்கும் நாய் தான். யாரை காட்டுகிறோமோ அவரை பார்த்து குறைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறது அரசு!

இந்த அளவு ஊழல் புகார் வந்தபின்னும், இப்படி மன்மோகனால் சொல்ல முடிகிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள். இவர்கள் தின பிழைப்பே போராட்டமாக இருக்கும்போது இவர்களா எதிர்த்து ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை தானே?

நமக்கெல்லாம் உண்மையிலேயே சுரணை இல்லையா?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, September 8, 2012

உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?



உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை. 

இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!

யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!

இன்றைய தினமலரில்..


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...